Priyanka Chopra: "படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட காயங்களை நினைக்கும்போது…" – பிரியங்கா சோப்ரா

2002-ம் ஆண்டு ‘தமிழன்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பாலிவுட்டில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தவர் பிரியங்கா சோப்ரா.

இந்திய சினிமாவைத் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதித்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். தற்போது ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜான் சேனா, இட்ரிஸ் எல்பா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா சின்ன சின்ன ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்த அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா

அதுமட்டுமன்றி, “கடந்த சில வருடங்களாகவே படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட காயங்களை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது” என்ற பதிவையும் பதிவிட்டிருக்கிறார். ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ காமெடி ஆக்ஷன் திரைப்படம் என்பதால் சண்டைக்காட்சிகளின் போது இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதேபோல ‘சிட்டாடல்’ படத்தில் நடிக்கும்போது 80 சதவிகித சண்டைக்காட்சிகளில் பிரியங்கா சோப்ராவேதான் நடித்திருந்தார். இதுகுறித்து அப்போது பேசியிருந்த பிரியங்கா சோப்ரா, “கிட்டத்தட்ட 80% சண்டைக்காட்சிகளை நானே செய்தேன்.

பிரியங்கா சோப்ரா

ஏனென்றால் நான் என் உடலையும் உள்ளுணர்வையும் நம்பியிருந்தேன். அப்போது நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.