அருள்மிகு காலபைரவ வடுகநாதர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் அமைந்துள்ளது. காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ காலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீ காலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர் அங்கே குடி […]