இரண்டு பிரபல நடிகர்கள் நடிக்க தடை!!

மலையாள திரையுலகை சேர்ந்த இரண்டு பிரபல நடிகர்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகர்களான ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவரும் வளர்ந்து வரும் கலைஞர்கள். ஆனால், இந்த இளம் வயதில் இருவரும் தடை செய்யப்படும் அளவுக்கு நடந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். வளர்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தடை விதித்து கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்பட பணியாளர்கள் … Read more

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்வது வழக்கம். எனவே, பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று மதுரை தென்னக ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு ஒருவழி சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த … Read more

அதிர்ச்சி! நக்சலைட்டுகள் தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழப்பு!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்தனர். போலீஸார் ரோந்து பணியை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அரன்பூர் என்ற பகுதியில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். நக்சலைட்டுகள் வாகனத்தை நோக்கி ஐஇடி ரக குண்டை வீசி வெடிக்கச் செய்தனர். தாக்குதலில் 10 வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் என 11 பேர் வீரமரணம் அடைந்தனர். 10 வீரர்களும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (DRG) பிரிவை … Read more

திமுக முன்னாள் பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

விருத்தாசலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த திமுக முன்னாள் பிரமுகர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி … Read more

450 படங்களில் நடித்த பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் காலமானார்..!!

தமிழ் , பிரஞ்ச் சினிமா உள்பட 450 படங்களில் நடித்த பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுகோயா காலமானார். அவருக்கு வயது 76. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவர் இன்று மதியம் 1.05 மணியளவில் அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 3 மணி முதல் கோழிக்கோடு டவுன் ஹாலில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை கண்ணாம்பரம் காபர்ஸ்தானில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ராமோஜி … Read more

குழந்தையை தத்தெடுத்து வளர்க்க இருக்கும் சின்னத்திரை நடிகை ரட்சிதா..!!

தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரட்சிதா, சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நீண்ட வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து கடந்த சில மாதங்களாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் தனியே வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. அந்த தீர்ப்பை வரவேற்று இன்ஸ்டாகிராமில், … Read more

மதுபானம் தொடர்பான அரசாணைக்கு தடை – சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

சர்வதேச கருத்தரங்குகள், திருமண நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள்,போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அண்மையில் அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதில் திருத்தும் செய்து, சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் சர்வேத கருத்தரங்கில் மட்டும் மதுபானங்கள் விநியோகம் செய்ய அரசு அனுமதி என அறிவிப்பு வெளியானது. இதில், அரசு முதலில் அறிவித்த திருமண நிகழ்வுகள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச … Read more

ஆஸ்துமா நோய்க்கு மீன் பிரசாதம்..!

ஒவ்வோர் ஆண்டும், பருவமழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மிருகசீர கார்த்திகையின்போது மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவது வழக்கம். இந்த நிகழ்வில் விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்டை வைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும். சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்துக் கொடுக்கப்படும். தொடர்ந்து … Read more

மீண்டும் டெல்லி மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு..!!

தலைநகர் டில்லியில், வடக்கு டில்லி – 104, தெற்கு டில்லி – 104 மற்றும் கிழக்கு டில்லி 64 வார்டுகள் கொண்ட மூன்று மாநகராட்சிகள் செயல்பட்டு வந்தன. கடந்த 2022ல் மூன்று மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டும் 250 வார்டுகள் டில்லி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2022ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, டில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி கட்சி 134, பா.ஜ., 104, காங்கிரஸ் 9 மற்றும் சுயேச்சை … Read more

தடுப்பு சுவரில் மோதிய மாநகர பேருந்து

சென்னை ஐசிஎஃப்பில் சாலையில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து திடீரென சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து குறுக்கே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க திடீரென பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்து அந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் 10 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அதில் 7 பயணிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. … Read more