காங். கில் தீவிர மோதல்.. இமாச்சல பிரதேச வழிகாட்டு குழு தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா

India oi-Halley Karthik சிம்லா: காங்கிரஸ் கட்சியின் இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவராக நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதே போல சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள … Read more

அசாமில் 4 மணி நேரம் இணைய சேவை முடக்கம்.. எதற்காக என்பது தான் டிவிஸ்ட்!

India oi-Mani Singh S திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் நடந்த அரசுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்துவிடக்கூடாது என்பதற்காக 4 மணி நேரம் இணைய சேவையை துண்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு வேலை என்பது பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாகவே உள்ளது. இதற்காக கல்லூரி படிப்பை படித்து முடித்துவிட்டு பல ஆண்டுகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். அரசு வேலையை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் படித்து வருகின்றனர். வேலைவாய்ப்பும் குறைந்துள்ளதால் … Read more

வளர்ந்த நாடுகளில் இப்படியா இருக்கு.. 'கர்வா சௌத்' மூட நம்பிக்கை..ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

India oi-Mani Singh S ஜெய்பூர்: வளர்ந்த நாடுகளில் பெண்கள் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னமும் சல்லடை வழியாக நிலவை பார்த்து தங்கள் கணவர் ஆயுள் விருத்திக்காக பெண்கள் வேண்டுவது துரதிருஷ்டவசமானது என்று ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இவரது அமைச்சரவையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருப்பவர் கோவிந்த் ராம் மேக்வால். கணவரின் நீண்ட ஆயுள் … Read more

அஸ்ஸாமில் மேலும் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர்.. தொடரும் தீவிர தேடுதல் வேட்டை!

India oi-Mathivanan Maran குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த மேலும் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அஸ்ஸாமில் பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்திருந்தன. அஸ்ஸா மாநில அரசும் இது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அஸ்ஸாமில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 11 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டது … Read more

\"அணு ஆயுதங்கள் இருக்கு.. எங்க ராணுவ பலம் தெரியுமா!\" காஷ்மீர் விவகாரம் குறித்தும் பாக். பிரதமர் பரபர

International oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லதொரு உறவு இருந்ததில்லை. எப்போதும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வரும். குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தைச் சொல்லலாம். இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரை தங்களுக்குச் சொந்தம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருவதே இரு நாடுகளுக்கும் … Read more

இது பாஜகவின் மத பயங்கரவாதம்.. வேறென்ன ஆதாரம் தேவை? பாஜக தலைவர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

India oi-Noorul Ahamed Jahaber Ali ஜெய்பூர்: பசு வதை செய்ததற்காக 5 பேரை நாங்கள் கொலை செய்து இருக்கிறோம் என்று ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஞான் தேவ் அஹுஜா பேசியுள்ள நிலையில், இது பாஜகவின் மத பயங்கரவாதம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. ராஜஸ்தானில் முந்தைய வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் ராம்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் ஞான் தேவ் அஹுஜா. அந்த … Read more

அசுர வேகத்தில் வந்த கார்.. பல அடி உயரம் பறந்த தம்பதியர்.. கணவன் உயிரிழப்பு; மனைவி படுகாயம்

India oi-Jackson Singh மலப்புரம்: கேரளாவில் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில் அதில் இருந்த தம்பதியர் பல அடி உயரம் பறந்து விழுந்தனர். இதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (40). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது மனைவி ஆஷாவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். குத்திப்புரம் … Read more

5 பேரை கொன்றுள்ளோம்..பசு மாடுகளை கொன்றால் போட்டு தள்ளுங்க.. தீயாக பரவும் பாஜக தலைவர் வீடியோ!

India oi-Mani Singh S ஜெய்பூர்: ”நாங்கள் இதுவரை 5 பேரை கொன்றிருக்கிறோம் என்றும், பசு வதையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் கொலை செய்யுங்கள்” என்றும் ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Recommended Video ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த 2017- ஆம் ஆண்டு ராம்கர் என்ற பகுதியில் இறைச்சிக்காக பசுவை கடத்தி செல்வதாக பெஹ்லு கான் என்ற 55-வயது நபர் பெஹ்ரார் என்ற இடத்தில் ஒரு கும்பலால் கொடூரமாக … Read more

மக்களை முட்டாள்களாக்கும் பிராமணர்கள்..சர்ச்சை பேச்சால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உமாபாரதி உறவினர்!

India oi-Mathivanan Maran போபால்: கடவுள், மதத்தின் பெயரால் பிராமணர்கள் பொதுமக்களை முட்டாளாக்குகின்றனர் என பேசிய மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் உமாபதியின் உறவினரும் பாஜகவின் ஓபிசி தலைவருமான பிரீத்தம் லோகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜக பிராமணர்களின் கட்சி என கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடையாளமாக இருந்தவர் உமாபாரதி. பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் உமாபாரதி மிக முக்கியப் பங்கு வகித்தவர். அண்மை காலமாக பாஜகவில் தீவிர நடவடிக்கைகளில் … Read more

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை: நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி

India oi-Mani Singh S சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலியாகினர். Recommended Video இமாச்சல பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக மழை பெய்து வருவதால், ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. … Read more