மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் கைது! திருப்பூர் அதிகாரியும் கைதாவாரா?

மதுரை: மதுரை மேலூர் 8வது வார்டில் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்னை செய்த பாஜக முகவர் கிரிராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் திருப்பூரில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணின் முகத்தைக் காண வாக்குச்சாவடி அலுவலரான அரசு அதிகாரி கூறியதும் சர்ச்சையானது. அவர்மீதும் நடவடிக்கை பாயுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரை மேலூர் 8வது வார்டில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்த நிலையில், அவரது வாக்காளர் அட்டையை சரிபார்க்கும் வகையில் முகத்தை காட்ட அங்கிருந்த … Read more

வாக்காளர்களுக்கு ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன்! அதிமுக பிரமுகர் கைது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பை தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி பேதமின்றி பல இடங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னையில் ஒரு பகுதியில் வாக்களித்த  வாக்காளர்களுக்கு கோழி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. வாக்காளர்களுக்கு கோழிக்கறி விநியோகம் செய்தது திமுகவினர் என்று கூறப்படுகிறது. அதுபோல மயிலாப்பூரில்,  ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன் வழங்கிய அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில், மண்டபம் ஒன்றில் … Read more

சென்னை பெசன்ட்நகரில் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த கும்பல்… பரபரப்பு…

சென்னை:  பெசன்ட் நகரில் திமுகவினர் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்  பெசன்ட் நகரின் ஓடைக்குப்பம் பகுதியில் 179ஆவது வார்டில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதமான நிலையில், சில இடங்களில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வாரி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல இடங்களில் … Read more

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் துவங்கியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. ஹிஜாப்புக்கு போட்டியாக சிலர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு; சென்னையில் 17.88%

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் 17.88% அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் சென்னை உள்பட  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சென்னை உள்பட … Read more

மனைவி கிருத்திகா உடன் வந்து வாக்களித்தார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து  ஜனநாயக  கடமையை நிறைவேற்றினார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான … Read more

திருச்சி, திருப்பூரில் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு…

சென்னை: திருச்சி, திருப்பூரில் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரம் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம்‌ ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலையிலேயே வாக்களிக்க வந்த பாதுமக்கள், எரிச்சல் அடைந்தனர். அதையடுத்து புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டுவாக்குப்பதிவு தொடங்கியது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…! வாக்காளர்கள் ஆர்வம்…

சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5மணி முதல் 6மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என … Read more

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, ஆசிரியர்களின் நடத்தையை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து என்பவர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார். பணியில் சேர்ந்த 2004-ம் … Read more

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை தேவையில்லை: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இதுகுறித்து கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் முன் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு என்றும் துணை ராணுவ படையினர் தேவையில்லை என்றும் … Read more