பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிப்பு

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது, லேசான சளி அறிகுறி உள்ளதாகவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறியுள்ளது. 95 வயதாகும் ராணி எலிசபெத் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை மிக நீண்டகாலம் ஆட்சி செய்பவர் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி இவர் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட … Read more

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது கடமை என்று கூறி உள்ளார். தாங்கள் நேசிக்கும் கடவுளுக்காக பணிவுடன் ஹிஜாப் அணிவதாக குறிப்பிட்டுள்ள சைரா, குறிப்பிட்ட கொள்கையைப் பரப்புவதாக, பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது மோசமான நிகழ்வு என கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார் விக்கி. இப்படம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத படமாக மாறியது. ஏனெனில் இப்படம் மூலம் தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் (Nayanthara) இடையே காதல் … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதில் விளம்பர மாடலாக வலம்வரும் கூலித் தொழிலாளி மம்மிக்கா

கோழிக்கோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மம்மிக்கா இவருக்கு வயது 60. கேரளாவின் வீதிகளில் லுங்கி சட்டையுடன் அன்றாடம் நடந்து செல்லும் கூலித் தொழிலாளியான மம்மிக்காவைக் கண்ட ஒருவர் அவரது அனுமதியுடன் அவரை புகைப்படம் எடுத்து தனது ஸ்டூடியோ-வில் வைத்திருந்தார். ஆறு மாதம் கழித்து மேலும் சில புகைப்படங்களை அவர் எடுக்க இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிரபல புகைப்படக் கலைஞரான ஷரீக் வாலயில் விளம்பர மாடலாக நடிக்க இவரை அணுகினார். விளம்பர மாடலாக நானா ? என்று ஆச்சரியத்தில் … Read more

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் : மதுரையில் பாஜகவினர் சிக்கினர்

மதுரை மதுரை நகரில் வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் கொடுத்த பாஜகவினர் பறக்கும் படையிடம் சிக்கினர் நேற்று தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது..   தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.    பல இடங்களில் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.   நேற்று வாக்குப்பதிவு நடந்த போதிலும் இது போல நிகழ்வுகள் நடந்துள்ளன. நேற்று மதுரை மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட … Read more

வெற்றி பெறப்போவது யார்? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது…!

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும். தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டு களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் மூலம், தேர்தலில், 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 … Read more

முதல்வர் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் மாணவர் சங்க தலைவர் கைது! இது தெலுங்கானா சம்பவம்….

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர் சங்க தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்மீது கழுதையை திருடியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் கழுதையின் உடலில் கேசிஆர் போஸ்டரை ஒட்டி, … Read more

வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு மேல் வந்து தகராறு: திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் அதிகாரிகள், போலீசாருடன் கட்சியினர் வாக்குவாதம்

சென்னை: வாக்குச்சாவடிக்கு 5மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித் திருந்த நிலையில், 5 மணிக்கு மேல் வந்து, தங்களை வாக்களிக்க அனுமதிக்குமாறு ஆளும்கட்சியினர் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்  திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் நடந்தேறி உள்ளது. மேலும் கோவையிலும் அரங்கேறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை … Read more