பொலிவியாவில் தொடர் கன மழையால் நிலச்சரிவு… ஏராளமான வீடுகள் சேதம் – 62,000 குடும்பங்கள் பாதிப்பு <!– பொலிவியாவில் தொடர் கன மழையால் நிலச்சரிவு… ஏராளமான வீடுக… –>

பொலிவியாவில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 62,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் லா பாஸில்,  கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவவில் புதைந்தும், மலைப்பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள் விழுந்தும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Source link

மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் கவசம் என்னும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நிறுவப்படும் என அறிவிப்பு <!– மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் கவசம் என்னும் பாதுகாப்பு… –>

மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் ரயில் மோதலைத் தவிர்க்கும் கவசம் என்னும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. ஒரே வழித்தடத்தில் இரு ரயில்கள் குறிப்பிட்ட தொலைவுக்குள் வரும்போது தானாகவே ரயிலின் இயக்கத்தை நிறுத்தி மோதலைத் தவிர்க்க உதவும் அமைப்பு கவசம் எனப்படுகிறது. ரயிலின் இயக்கத்தில் மனித தவறுகள், தவறான செயல்பாடுகள் ஆகியன குறித்தும் இந்த அமைப்பு தானாகவே அறிவிக்கும். ரயில்கள் அதிவிரைவாகச் செல்லும்போதும், நிலையப் பகுதிகளிலும், பணிநடைபெறும் தடங்களிலும் மோதல் ஏற்படாமல் தடுக்கவும் இந்த … Read more

"போ சாமி…" என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை <!– &quot;போ சாமி…&quot; என்றதும் அமைதியாக காட்டுக்குள் சென்ற யானை –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேருந்தை மறிக்க வந்த காட்டு யானையை, பழங்குடியின மக்கள் போ போ என பாசமாக சொல்லி காட்டுக்குள் அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. கோயம்புத்தூரில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து, தூமனூர் பிரிவை கடந்த போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை திடிரென பேருந்து நோக்கி ஆவேசமாக ஓடி வந்தது. பேருந்தில் பயணித்த பழங்குடி மக்கள், யானையை பார்த்து ”போ சாமி” என சத்தமிட, அது அமைதியாக … Read more

அமெரிக்க கடற்கரை பரப்பில் ஓய்வு எடுத்த அரிய வகை ஆக்டோபஸ் <!– அமெரிக்க கடற்கரை பரப்பில் ஓய்வு எடுத்த அரிய வகை ஆக்டோபஸ் –>

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் கடற்கரை பரப்பில் அமைதியாக ஓய்வு எடுத்த அரிய வகை ஆக்டோபசின் வீடியோ வெளியாகி உள்ளது. Heather Leon என்பவர் தனது தாயுடன் Myrtle கடற்கரைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஆழமற்ற நீரில் ஆக்டோபஸ் ஒன்று ஓய்வு எடுப்பதைக் கண்டார். உடனடியாக அதனை வீடியோவில் பதிவு செய்த அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். பின்னர் அந்த ஆக்டோபஸ் தண்ணீரில் நீந்தியபடி அங்கிருந்து செல்வதையும் அவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.  Source link

டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவன் கைது <!– டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த… –>

டெல்லியில் சிவப்பு சந்தனமரத்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். புது டெல்லி ரயில் நிலையத்தில் 42 புள்ளி 5 கிலோ எடை கொண்ட செம்மரத்துடன் சிக்கிய அவனிடமிருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஹார்கஞ்ச் கேட் எண்1 அருகே சந்தேகப்படும் படி நடமாடிய அவனை கண்காணித்த போலீசார் அவனிடமிருந்த டிராலி பேக்கை சோதனையிட்ட போது செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. உடனடியாக வனத்துறை அதிகாரி வரவழைக்கப்பட்டு … Read more

கடன் வாங்கித் தருவதாக கூறி சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 பெண்களிடம் 13 லட்ச ரூபாய் மோசடி ; இளைஞர் கைது <!– கடன் வாங்கித் தருவதாக கூறி சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 ப… –>

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக சுய உதவிக் குழுவை சேர்ந்த 33 பெண்களிடம் 13 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர். சுய உதவிக்குழுவை சேர்ந்த 33 பெண்களின் ஆதார், வங்கி எண்களை பெற்ற சதீஷ்குமார் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் அதை வழங்கி பெண்களுக்கு கடன் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் 33 பேரையும் தனித் தனியாக சந்தித்து வேறொருவருக்கு வர வேண்டிய பணம் தங்கள் … Read more

அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 9 லட்சத்தை தாண்டியது <!– அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 9 லட்சத்தை தாண… –>

அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு புது உச்சமாக 9 லட்சத்தை தாண்டியது. அங்கு நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்து 600 தொற்றுக்கு உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு கடந்த ஜனவரியை காட்டிலும் தற்போது குறைந்து வருவதாகவும் இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 64 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், மற்றவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   Source … Read more

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை… லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை <!– காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை…… –>

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சகுரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில்  பாகிஸ்தான் லஷ்கர்இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

குடியால் கெட்ட கூட்டாளி தலையில் குத்திய கத்தியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குடிமகன்..! கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் <!– குடியால் கெட்ட கூட்டாளி தலையில் குத்திய கத்தியுடன் ஆஸ்பத்… –>

சேலம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட ஆத்திரத்தில்  நண்பரை கத்தியால் விரட்டி விரட்டி குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. தலையில்  குத்தப்பட்ட  கத்தியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம், குண்டத்து மேட்டில் உள்ள அரசு மதுபான கடை ஒன்றில் வியாழக்கிழமை இரவு சவுந்தரராஜன் என்பவர், மூன்று நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அதில் சக்திவேல் என்ற நண்பர் சவுந்தர்ராஜனிடம் கடன் வாங்கி பல மாதங்களாக திருப்பி … Read more

இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் <!– இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் –>

இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டும் பனிமழைக்கு இடையிலும் ரயில்வே சேவைகள் நீடிக்கின்றன. ரயில்கள் வெண் பனி போர்த்திய மலைப்பாதைகளில் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. கால்கா சிம்லா இடையே நேற்று ரயில்கள் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்டன. இதே போல் உத்தரகாண்ட்டிலும் கடும் பனிமழை பெய்து வருகிறது. இதனால் கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற உயரமான மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டு கண்ணுக்கு விருந்தளித்தன. சாமோலி என்ற இடத்தில் பனிச்சரிவால் சாலைகள் அடைபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனியை அகற்றுவதற்காக நீண்ட வரிசை கட்டி … Read more