பி.எம்.டபிள்யூ. மின்சார கார் விளம்பரத்தில் கிரேக்க கடவுள் ஜீயஸாக "அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்" <!– பி.எம்.டபிள்யூ. மின்சார கார் விளம்பரத்தில் கிரேக்க கடவுள்… –>

BMW மின்சார கார் விளம்பரத்தில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கிரேக்க கடவுள் ஜீயஸாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் மின்சார கார் விற்பனையை BMW தொடங்கியது. ஐ சீரிஸில் வெளியாகும் மின்சார கார்களின் புதிய விளம்பரத்தின் டீஸரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கிரேக்க கடவுளான ஜீயஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்னால்ட், ஜீயஸ் என்ற பெயரை தவறாக உச்சரிக்கும் coffee விற்பனையாளரை முறைத்தபடியே சரியான உச்சரிப்பை தெரிவித்து விட்டு செல்கிறார். வரும் … Read more

பனிப்பொழிவை ரசிக்க ஹிமாச்சலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் <!– பனிப்பொழிவை ரசிக்க ஹிமாச்சலுக்கு படையெடுக்கும் சுற்றுலா ப… –>

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவின் தீவிரம் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் பனிப்பொழிவை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் அங்கு படையெடுத்து வருகின்றனர். ஷிம்லாவில் இன்று வெப்பநிலை மிக மிக குறைந்து மைனஸ் 2 புள்ளி 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. அந்நகரில் இந்த ஆண்டில் பதிவாகிய மிகக்குறைந்த பட்ச வெப்பநிலை இதுவாகும். இதே போல, Lahaul-spiti மாவட்டத்தில் உள்ள keylong பகுதியில் வெப்பநிலை மைனஸ் 12 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், கின்னார் மாவட்டத்தில் … Read more

வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியல் வெளியீடு <!– வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உண… –>

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தால் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் நிற்கவும், சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகள் வசந்த பவனில் நிற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் … Read more

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்கம்.! <!– பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் கோலாகல தொடக்கம்.! –>

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சீனத் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. 91 நாடுகளைச் சேர்ந்த 2,875 வீரர்-வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்தார். புதின், இம்ரான்கான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண விளக்குகள் … Read more

அரசின் நீட் விலக்கு முடிவுக்கு அதிமுக ஆதரவு – ஓ.பி.எஸ் <!– அரசின் நீட் விலக்கு முடிவுக்கு அதிமுக ஆதரவு – ஓ.பி.எஸ் –>

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் அதிமுக துணை நிற்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து, அதிமுகவின் நிலைப்பாடை ஏற்கனவே பேரவையில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். Source link

மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்.. மீட்கும் பணி தீவிரம்..! <!– மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்….. –>

மொரோக்கோவில் ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்து 104 அடி ஆழத்தில் 4 நாளாகச் சிக்கியுள்ள 5 வயதுச் சிறுவனை மீட்பதற்காக, அதன் அருகே ஆழமான குழியைத் தோண்டியுள்ள மீட்புக் குழுவினர் சிறுவனை நெருங்கியுள்ளனர். 25 சென்டிமீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய்க் கிணற்றில் சிறுவன் ராயன் தவறி விழுந்ததை அறிந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கேமராவைச் செலுத்திப் பார்த்தபோது சிறுவன் தலையில் இலேசான காயமடைந்திருப்பதும், தன்னுணர்வுடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆக்சிஜன் குழாய், உணவு, … Read more

ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி <!– ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்… –>

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 13 கோடியே 14 இலட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை அண்மையில் வாங்கியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் தெற்கு மும்பையில் உள்ள மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் அந்தக் கார் இரண்டரை டன் எடையும் 564 பிஎச்பி திறனும் கொண்டது. கரடுமுரடான பாதையிலும் செல்வதற்கு ஏற்றது. 2018இல் அறிமுகமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் அடிப்படை விலை 6 … Read more

பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு <!– பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர… –>

பெரு நாட்டில் பயணிகள் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பிரபல தொல்பொருள் ஆய்வு  தலமான Nazca Lines பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் டச்சு நாட்டினர் என்றும், 2பேர் சிலி நாட்டினர் என்றும் 2பேர் பெரு நாட்டினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் கூறும் போது செஸ்னா 207 ரக விமானம் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரெய்ச் விமான … Read more

வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ <!– வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வல… –>

உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரக வாயிலில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைவரை ஓடியே சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி பெப்னா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆவார். ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுத் தொடங்கியது. வேட்பு மனு முடிவடையச் சில நிமிடங்களுக்கு முன் பல்லியா ஆட்சியரக வாயிலுக்குக் காரில் … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற அரசியல் பிரமுகருக்கு காலில் எலும்பு முறிவு..! <!– சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது நடவடிக்கை.. மாடியில… –>

விருதுநகரில் கட்சிக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அரசியல் பிரமுகரை போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாடியில் இருந்து குதித்து, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28-ந் தேதி சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் விளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு … Read more