சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர்
கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்க வைத்திய சாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சின் அறிவித்தலுக்கு இணங்க விசேட உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கான அனுமதி 27வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனெனில், தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வருவதே இவ்வதிகரிப்பிற்கான காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதனால் வைத்தியசாலைகளில் … Read more