World War: யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள்

உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய ஆயுதப் போட்டிக்கு அஞ்சும் சர்வதேச நாடுகளின் கவலைகளுக்கு மத்தியில் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்காவின் B-29 போர் விமானம் எனோலா கே, … Read more

மந்தமான விற்பனை! செலவுகளை குறைக்க 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய அலிபாபா

Alibaba Fired Employees: சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, மந்தமான விற்பனை மற்றும் நாட்டில் நிலவும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றின் மத்தியில் செலவினங்களைக் குறைக்க கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களை 245,700 ஆக குறைத்தது. ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஹாங்சோவை தளமாகக் கொண்ட அலிபாபாவை விட்டு வெளியேறினர். ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் அலிபாபாவின் பணியாளர்கள் 13,616 ஆகக் … Read more

அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது உக்ரைனா ரஷ்யாவா?

ரஷ்யாவின் படையெடுப்பால் பல மாதங்களாக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் உக்ரைனின் சிக்கல்கள் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. வெள்ளிக்கிழமையன்று ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல்கள் தொடர்பாக உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது மற்றொன்று குற்றம் சாட்டுகின்றன. உக்ரேனிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவை ரஷ்யா மீது குற்றம் சாட்டும் உக்ரைன், இந்த “பயங்கரவாதச் செயலுக்கு” மாஸ்கோ பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் … Read more

வட கொரியாவில் யாருக்குமே காய்ச்சல் இல்லை! இதென்ன புதுக்கதை?

சியோல்: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவில் தற்போது  யாருக்குமே காய்ச்சல் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஜூலை 30ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக காய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. சில மாதங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த நாட்டில்  4.77 மில்லியன் காய்ச்சல் நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளதாக வட கொரியா கூறுகிறது, அதே நேரத்தில் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து 74 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், கோவிட் நோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை வடகொரியா … Read more

கனவு நனவான தருணம் : ஒரே விமானத்தில் விமானியான தாய் – மகள்

ஹோலி என்ற பெண்மணி தனது கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக தனது விமானப் பயணத்தைத் தொடங்கினார். ஒரு விமானி ஆக வேண்டும் என விரும்பிய அவர், தனது மகள் கெல்லிக்கு இரண்டு வயதாக இருந்தபோது, விமானி ஆவதற்குப் பயிற்சி மேற்கொண்டார்.  அவருக்கு கெல்லி உட்பட 3 குழந்தைகள் இருந்தாலும் ஹோலி தனது கனவைக் கைவிடவில்லை.  ஹோலி கடந்த 18 வருடங்களாக விமானியாகப் பணியாற்றி வருகிறார். தாயைக் கண்டு தானும் விமானி … Read more

கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி

SARS-CoV-2 vs Guillain-Barre Syndrome: தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவரின் பதிவு செய்யப்பட்ட மரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தவர், தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் என்றும், அவர் குய்லின்-பாரே சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்றும், தென்னாப்பிரிக்காவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. நோயாளியின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த சுகாதார கண்காணிப்பு … Read more

போர்ப்பயிற்சித் தொடங்கிய சீனா : தைவான் கடற்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வரும் நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது இந்தப் பயணம் சீனாவைக் கொந்தளிப்படைய வைத்துள்ளது.  இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங், அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இந்த நிலையின் தைவானின் கடற்பரப்பைச் சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளதால் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் … Read more

தைவானில் கால் வைத்த நான்சி பெலோசி : சீனா இனி என்ன செய்யும்?

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இதற்கு சீனா எப்படியெல்லாம் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம். சீன உள்நாட்டுப் போரின்போது பிரிந்து சென்ற தைவானை, தங்களது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா கூறி வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும்,  ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதியுமான நான்சி பெலோசி தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானையும் சேர்த்துக் கொண்டார். … Read more

புடின் காதலியின் சொத்துக்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கு நிறைந்தவர்களை குறி வைத்து, அமெரிக்கா பொருளாதார தடை விதித்து வருகிறது. அந்த வகையில், விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவின் விசாவை பிடன் நிர்வாகம் முடக்கியுள்ளதாகவும், அவரது சொத்துகள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதாகவும் அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.   உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் ரஷ்ய ஊடக … Read more

தாய்லாந்தின் புதிய கஞ்சா கொள்கையால் நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Cannabis in Thailand: தாய்லாந்தில் மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கியதன் விளைவாக அந்த நாட்டின் சுற்றுலாவில் மிகப் பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கொண்டாடும் பல நிகழ்வுகள் தாய்லாந்தில் களைகட்டியுள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் களிப்புடன் தாய்லாந்திற்கு வருகை தருகின்றனர். 2018 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மரிஜூவானாவை மருத்துவ பயன்பாட்டிற்காக சட்டபூர்வம் ஆக்கிய தாய்லாந்து, இந்த ஆண்டு, … Read more