Aishwarya:தனுஷுடன் சேர்வதா, வேண்டாமா?: ஒரு முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா

தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார்கள். அறிவிப்பு வெளியிட்ட கையோடு வாத்தி படத்தில் நடிக்க சென்றுவிட்டார்
தனுஷ்
.

காதல் பாடலை இயக்க ஐஸ்வர்யாவும் கிளம்பிவிட்டார். அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்கள்.

Dhanush:ரஜினி பெயரால் எனக்கு ஒரு புண்ணியமும் இல்ல: தனுஷ்
2 பிள்ளைகளை வைத்துக் கொண்டு உன் சந்தோஷம் தான் முக்கியம்னு முடிவு எடுத்துட்ட என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டு கத்தினாராம் ரஜினி. அதை பார்த்து பயந்த ஐஸ்வர்யாவோ, மீண்டும் தனுஷுடன் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

இந்த முடிவை தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவிடம்
ஐஸ்வர்யா
தெரிவித்தாராம். அவரும் சந்தோஷப்பட்டு தனுஷை சமாதானம் செய்து வருகிறாராம். ஆனால் யார் என்ன சொன்னாலும் சரி, இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழவே மாட்டேன் என அடம்பிடிக்கிறாராம் தனுஷ்.

ரஜினியே போன் செய்து பேசியும் கூட தனுஷ் மனம் மாறவில்லையாம். நான் இப்போது தான் சந்தோஷமாக, நிம்மதியாக, சுதந்திரமாக இருக்கிறேன். அதனால் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறாராம் தனுஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.