அடையாளம் தெரியாத சாமியாரை கேட்டு முடிவுகள்; தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் மீது புகார்: சித்ராவுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு

அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தேசிய பங்கு சந்தையின் முக்கிய முடிவுகளை NSE-யின் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா மேற்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. NSE எனப்படும் தேசிய பங்கு சந்தை நிறுவனர்களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் NSE -யின் நிர்வாக இயக்குனராக இருந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து பங்கு வர்த்தனை வாரியமான செபி விசாரணை மேற்கொண்டது. இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்கு சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அடையாளம் தெரியாத சாமியாரின் ஆலோசனைப்படி சித்ரா ராமகிருஷ்ணா எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.