அரசு ஊழியர்களுக்கு செக் – மாநில அரசு இப்படியொரு உத்தரவு!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், வரும் 17 ஆம் தேதி முதல் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில், கடந்த ஜனவரி மாதம், ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை கோரத் தாண்டவமாடியது. இதன் காரணமாக மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.

அதன் ஒரு பகுதியாக, மத்திய – மாநில அரசு ஊழியர்கள் 50 சதவீதம்
வீட்டில் இருந்து வேலை
(
Work From Home
) செய்ய அந்தந்த மாநில அரசு அனுமதி வழங்கின. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தினமும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என, மத்திய – மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்து உள்ளன.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், வரும் 17 ஆம் தேதி முதல் அலுவலகத்திற்கு வருகைத் தர வேண்டும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வரும் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.