உலகக் கோப்பை வென்றால் ரூ. 9.94 கோடி| Dinamalar

துபாய்: பெண்கள் உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 9.94 கோடி பரிசுத் தொகை தரப்பட உள்ளது.

நியூசிலாந்தில் மார்ச் 4 – ஏப். 3ல் பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதற்கான மொத்த பரிசு தொகை ரூ. 26.36 கோடி. கடந்த 2017 தொடரை (ரூ. 11.30 கோடி) விட 75 சதவீதம் அதிகம்.

பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 9.94 கோடி தரப்பட உள்ளது. இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 4.52 கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோற்கும் இரு அணிகள் தலா ரூ. 2.26 கோடி பெறும். லீக் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ. 52.73 லட்சம் வழங்கப்படும். மொத்தம் நடக்கும் 28 லீக் போட்டிகளில், ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ. 18.83 லட்சம் கிடைக்கும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.