விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை – 18 பேர் உயிரிழப்பு!

பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின், ரியோடி ஜெரினோ மாகாணத்தில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாகாணத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரொபொலிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஒரே நாளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நிலச்சரிவால் பல்வேறு வீடுகள் சேதமடைந்து உள்ளன. மேலும், நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த திடீர் முடிவு?

இந்நிலையில், ரியோடி ஜெனிரோவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், பலர் மாயமாகி உள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கையில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.