தனுஷ் தற்போது யாருடன் இருக்கிறார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்த்தியடைய செய்தது. இந்த செய்தி வந்து ஒருமாதம் ஆகியும் தற்போது வரை இவர்களின் விவாகரத்தைப்பற்றி பரபரப்பாக பேசிவருகின்றனர்.

இருப்பினும் இவர்களை சேர்த்து வைத்தே தீருவேன் என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விடாமுயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர்.

விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா அளித்த முதல் பேட்டி..தனுஷ் பற்றி என்ன சொன்னார் தெரியுமா ?

தனுஷ்
வாத்தி
படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது நானே வருவேன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடலின் படப்பிடிப்பில் இருக்கிறார். இவ்வாறு வேலைகளில் கவனம் செலுத்தி வரும் இவர்களை இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும், நெருங்கிய நண்பர்களும் சமாதானம் பேசி சேர்த்து வைக்கும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினியும் இவர்கள் பிரிந்ததினால் கடும் கோபத்தில் இருக்கிறார். எனவே தனது தந்தையை சமாதானம் செய்ய ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேரஇருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடலின் ப்ரோமோவில், ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷ் பெயரை நீக்கி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என தன் பெயரை மாற்றியுள்ளார்.

இதிலிருந்து இவர்கள் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் தற்போது தனுஷ் அவரது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது.

நானே வருவேன் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ் அவர் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் அவரின் மகன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் ஹைதராபாதில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஹீரோ , சின்ன ஹீரோ என்றெல்லாம் இல்லை , நல்ல படங்கள் பண்ணுவேன் – நடிகை திவ்யபாரதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.