உ.பி: திருமண வீட்டில் நேர்ந்த சோகம் – கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் கிணற்றின் இரும்பு வலை உடைந்ததில் அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஷிநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தவர்கள் அங்கிருந்த கிணற்றின் இருந்த இரும்பு வலையின் மீது நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அதிக பாரத்தால் கிணற்றின் இரும்பு வலை உடைந்து அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பேரும் கிணற்றுக்குள் விழுந்து மூழ்கினர். இந்த விபத்தில் 13 பெண்கள் உயிரிழந்த நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
image
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாயை குஷிநகர் மாவட்ட ஆட்சியர் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உ.பி.யில் சோகம்: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.