ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தல் கும்பல் கைது.. இரண்டு தந்தங்கள் பறிமுதல்.! <!– ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தல் கும்பல் கைது.. இரண்ட… –>

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யானை தந்தம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 10 லட்சம் மதிப்பிலான இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், புல்பத்தி காட்டுப்பகுதியில் 2 யானை தந்தங்கள் வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், யானையை கொன்று வேட்டையாடிய கும்பலை தேடி வருகின்றனர். வனகுற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வன உயிரினங்களை பாதுகாக்க முன்வர வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.