அரசு ஊழியர்களுக்கு இப்படியொரு செக் – வெளியானது புது உத்தரவு!

மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில், ஒமைக்ரான் பரவல் மற்றும்
கொரோனா
மூன்றாவது அலை காரணமாக, கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவியது. இதன் காரணமாக மத்திய
அரசு அலுவலகங்கள்
மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, அரசு அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை ரத்து போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக,
மத்திய அரசு ஊழியர்கள்
அனைவரும் கடந்த 7 ஆம் தேதி முதல் அலுவலகங்களுக்கு தவறாமல் வருகைத் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆதார் எண் இணைப்புடன் உள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறையை மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்றும், அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.