இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 47 பேர் விடுவிப்பு <!– இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 47 பேர் விடுவிப்பு –>

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 56 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த வாரம் 9 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி, சொந்த ஊர் திரும்பிய நிலையில், மேலும் 47 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

அவர்களுக்கு வரவேற்பு அளித்த மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வேன் மூலம் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவடங்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.