உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும்: ஐ.நா. எச்சரிக்கை


உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார்.

ஜேர்மனியின் முனிச்சில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இந்த மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் பிரச்னை விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கிறது.

இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்னை போராக மாறினால், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார்.

உக்ரைனைச் சுற்றி ரஷ்ய படைகள் குவிந்துள்ளதால், அதிகரித்த பதட்டங்கள் மற்றும் ஐரோப்பாவில் இராணுவ மோதல் பற்றிய ஊகங்கள் அதிகரித்துள்ளது குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

அப்படி நடந்தால், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்த Guterres, பதற்றத்தை தணிக்க தூதரக முயற்சிகளை தவிர வேறு வழியே இல்லை என தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.