உதவ ஆளின்றி தவித்த மாற்றுத் திறனாளியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வாக்களிக்க செய்த வட்டாட்சியர், காவலர்.! <!– உதவ ஆளின்றி தவித்த மாற்றுத் திறனாளியை கைத்தாங்கலாக அழைத்த… –>

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வாக்குச்சாவடிக்கு 3 சக்கர சைக்கிளில் வந்த மாற்றுத் திறனாளியை வட்டாட்சியரும் காவலரும் இணைந்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வாக்களிக்க உதவினர்.

பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு 3 சக்கர சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், உதவி செய்ய ஆளின்றி தவித்துக் கொண்டு இருந்தார்.

அந்த நேரம் அங்கு ஆய்வுக்காகச் சென்ற வட்டாட்சியர் தனபதி, காவலர் ஒருவரும் சேர்ந்து, அவரை கைத்தாங்கலாக வாக்குச்சாவடிக்குள் தூக்கிச் சென்று வாக்களிப்பதற்காக உதவி செய்தனர். வாக்களித்து முடித்த பின் தூக்கிச் சென்று 3 சக்கர சைக்கிளில் அமர வைத்து வழியனுப்பி வைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.