மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. முகவர் வாக்குவாதம்.! <!– மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெ… –>

மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என்று  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட  8-வது வார்டில் அல் – அமீன் உருது தமிழ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண்கள் பலர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தனர்.

அப்போது, முகத்தை காட்டாமல் வாக்களிக்க அனுமதிப்பதாக கூறி வாக்குச்சாவடியில் இருந்த பா.ஜ.க. முகவர் கிரிராஜன், ஹிஜாப்பை கழற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபடவே, அவர் தேர்தல் அலுவலர்களால் வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.