ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி.. என்ன தலைவரே கடைசில இப்படி பண்ணிட்டீங்க..!

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இன்று மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர்
விஜய்
. அதனை தொடர்ந்து கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் வாக்களித்தனர். இவர்களை போல் நடிகர் ரஜினியும் வாக்களிக்க வருவார் என காலையில் இருந்தே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மாலை வரை ரஜினி வாக்களிக்க வருவார் என காத்திருந்தனர்.

ஆனால் கடைசி வரை ரஜினி வாக்களிக்க வரவில்லை. அண்மையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் – தனுஷும் பிரியவுள்ளதாக அறிவித்தனர். மகளின் விவாகரத்து முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் வலியுறுத்தினாராம். அது மட்டுமல்லாமல் குடும்ப நண்பர்கள் மூலமாக தனுஷ், ஐஸ்வர்யா இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஜினி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

அஜித் ரசிகர்களை அலறவிட்ட போனி கபூர்: இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லயே..!

குடும்ப பிரச்சனையால் மன வேதனையில் இருக்கும் ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அப்டேட் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நகராட்சி தேர்தலில் ரஜினி கலந்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். எப்போதும் அதிகாலையிலே ஓட்டு போட வரும் ரஜினி இன்று வாக்களிக்க வரவில்லை.அதே போல் அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு, த்ரிஷா, தனுஷ், வடிவேலு உள்ளிட்டவர்களும் வாக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மற்றும் கார்த்திக் வாக்குப்பதிவு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.