ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா -மோகன் பகான் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'

கோவா
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா   -மோகன் பகான் அணிகள் மோதின 
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் கேரளா அணியின் அட்ரியன் லூனா 7 வது மற்றும் 64  வது நிமிடத்தில் கோல் அடித்தார் .
மோகன் பகான் அணியின் டேவிட் வில்லியம்ஸ் 8 வது நிமிடத்தில் கோல் அடித்தார் .மற்றும்  ஜோனி கவிகோ 90 நிமிடம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில்  கோல் அடித்தார் .
இதனால் ஆட்டம் 2-2 என ‘டிரா’ ஆனது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.