சம்பள பாக்கி கேட்ட காவலாளி எரித்துக் கொலை.! நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேருக்கு போலீசார் வலை <!– சம்பள பாக்கி கேட்ட காவலாளி எரித்துக் கொலை.! நிறுவன உரிமைய… –>

கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரத்தில் சம்பள நிலுவைத் தொகையை கேட்ட காவலாளியை எரித்துக் கொன்றதாக செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த ரத்தினவேலு என்பவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள எஸ்.எஸ். செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், சில மாதங்களாக நிறுவனம் முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் கள அதிகாரியிடம் சம்பளம் கேட்டதற்கு இருவரும் ரத்தினவேலுவை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரத்தினவேலுவை தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு இருவரும் தப்பியதாக கூறப்படுகிறது.

அருகில் இருந்தவர்கள் ரத்தினவேலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தலைமறைவான செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.