செய்யாத காரியத்திற்காக ஐஸ்வர்யாவை பாராட்டும் தனுஷ் ரசிகர்கள்

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

ரஜினியின் கோபத்தை பார்த்து மிரண்ட ஐஸ்வர்யாவோ, மீண்டும் தனுஷுடன் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையவே இனியும்
தனுஷ்
வேண்டாம் என்கிறாராம்.

தனுஷ் வேண்டாம் என்றாலும் இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா இன்றுவரை நீக்கவில்லை. அதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை பாராட்டுகிறார்கள்.

அண்ணனை பிரிந்து வாழ்ந்தது போதும் அண்ணி. தயவு செய்து அவருடன் மீண்டும் சேர்ந்துவிடுங்கள். யாத்ரா, லிங்கா பாவம். நீங்கள் மீண்டும் சேர்வீர்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

தனுஷை பிரிந்த கையோடு முசாபிர் என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கினார் ஐஸ்வர்யா. அந்த ட்ரெய்லரில் தன் பெயருக்கு பின்னால் தனுஷ் பெயரை வைக்கவில்லை.

Dhanush:கமலுக்கு ஒரு அம்ரிதா, தனுஷுக்கு கவிதா: சூப்பர் பெண்மணிகள்
தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர வேண்டும் என்று ரஜினி தான் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவுடன் இனியும் சேர்ந்து வாழ மாட்டேன் தலைவரே என்று கூறிவிட்டாராம் தனுஷ்.

தனுஷின் மனதை மாற்ற அவர் குடும்பத்தாரும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.