திண்டிவனத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்த அதிமுக பெண் வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை, திமுகவினர் தாக்கியதாக கூறி அதிமுகவினர் போராட்டம்.! <!– திண்டிவனத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்த அதிம… –>

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் இருந்த அதிமுக பெண் வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை, திமுகவினர்  தாக்கியதாக கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

19-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கும், அதிமுக வேட்பாளர் சுதா சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரிக்க அதிமுக வேட்பாளர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ரோஷனை காவல் நிலையம் புகுந்து சுதா சரவணன், குடும்பத்தினர், மற்றும் போலீசாரை திமுகவினர் தாக்கியதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக டி.ஐ.ஜி, மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.