ஒரே நாளில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா… என்னவாவது நாடு?

கொரோனா மூன்றாவது அலை உலக நாடுகளில் பரவலாக குறைந்து வருகிறது. இருப்பினும் ரஷியாவில் அதன் தாக்கம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. அங்கு கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டில் புதிதாக 1, 70, 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 6,388 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நேற்று மட்டும் கொரோனாவுக்கு அங்கு 745 பேர் உயிரிழந்தனர்.

அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 296 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளதாக ரஷிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணிக்கு கொரோனா – தனிமையில் இருப்பதாக தகவல்!

இருப்பினும் ரஷியாவில் நாள்தோறும் புதிதாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது ரஷிய நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

2020 இல் கொரோனா முதல் அலையின்போது உலக அளவில் அதிக உயிர் பலியை சந்தித்த நாடுகளில் ரஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.