காஞ்சிபுரம்: தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் தீக்குளித்து உயிரிழப்பு!

காஞ்சிபுரம் அருகே தீக்குளித்து இறந்த முதியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தீக்குளித்து இறந்து கிடப்பதாக நேற்றிரவு தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் முதியவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். தாம்பரம் ரயில்வே போலீசார் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இறந்து போன முதியவர் செங்கல்பட்டிலிருந்து திருமால்பூர் வரை ரயிலில் வந்து, பை கொண்டு செல்வது போன்று பதிவாகி இருந்தது. இறந்த நபர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. கைப்பற்றிய சிசிடிவி காட்சிகள் மூலமாக தாம்பரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காணாமல் போனவர்கள் குறித்து அங்குள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குககளை ஆய்வு செய்யும் பணியிலும் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். இறந்து போன முதியவர் குறித்து தகவல் தெரிந்தால் ரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தாம்பரம் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.