முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர்

‛சீதா ராமம்' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: காதல் போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு வசதியாக இல்லை. நான் பயப்படுவேன். அதை எனது பெற்றோரும் ஏற்கவில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க விரும்பிய போது, அதில் முத்தக் காட்சி சம்பந்தப்பட்டிருந்ததால் நான் விலக வேண்டியிருந்தது. ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும்.

உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், நீங்கள் அதைப் பற்றி பேசலாம். முத்தக்காட்சிகளில் நடிக்காததால் நான் பல திரைப்படங்களை தவறவிட்டேன். இந்தவிதமான காட்சிகளில் நடிக்க நான் பயப்படுவேன். இதனால் அந்த காட்சி வேண்டாம் என்று சொல்வேன். ஆனால் எத்தனை நாட்கள் இவ்வாறு வேண்டாம் என்று சொல்ல முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.