‘சில் திதி சில்’- மணமகன் கொடுத்த பர்பியை கோபத்தில் தூக்கி எறிந்த மணமகள் – வைரலாகும் வீடியோ…!

மணமகன் மற்றும் மணமகளின் வாழ்க்கையில் திருமண நாள் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு மணமகள் தனது திருமண நாளை தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளாக நினைக்கவில்லை.

சமூக வலைதளத்தில் ‘சில் திதி சில்’ என்ற இந்த வேடிக்கையான வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மணமகள் சிவப்பு நிற லெகங்காவும், மணமகன் சூட்டும் அணிந்துள்ளனர். திருமண விழா முடிந்ததும் இருவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்பு ஒரு மேடையில் நிற்கிறார்கள்.
அப்போது திருமண சடங்குகள் தொடங்கியதும், ஐயர் மணமகன் மணமகளுக்கு கொடுக்கக்கூடிய சில இனிப்புகளை வழங்குகிறார். அப்போது, மணமகன் மணமகளுக்கு பர்பியை ஊட்டும்போது திடீரென கோபமடைந்த மணமகள் அதை கூட்டத்தில் தூக்கி எறிந்தார்.
இதற்குப் பிறகு, பூசாரி மணமகளுக்கு ஒரு டம்ராரில் தண்ணீரைக் கொடுக்கிறார், அதனை மணமகள் மணமகனுக்குக் குடிக்க  கொடுக்கும் போது மணமகன் குடிக்க மறுத்ததால் மணமகள் அதையும் கோபமாக கூட்டத்தில் தூக்கி எறிந்தார். இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த பார்வையாளர்கள், மணமகளுக்கு மணமகனுடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், திருமண நாளில் இது போன்று சண்டையிட்டால் திருமணம் நீடிக்காது என்றும் பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.




Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.