152 லஞ்ச அதிகாரிகளுக்கு ஒடிசாவில் கட்டாய ஓய்வு| Dinamalar

புவனேஸ்வர் : ஒடிசாவில் ஊழல் செய்த 152 அரசு அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரிநாத் மிஸ்ரா.வருமானத்திற்கு அதிகமாக 9 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கட்டாக் குர்தா ஜாஜ்பூர் நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரிநாத் மிஸ்ராவுக்கு சொந்தமான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.இதையடுத்து திரிநாத் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு அளித்து ஒடிசா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதே போல கடந்த 2019ல் இருந்து ஊழல் செய்த அரசு அதிகாரிகள் 152 பேருக்கு ஒடிசா அரசு கட்டாய ஓய்வு அளித்து உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.