மதுரை: மு.க.அழகிரி ஆதரவாளர் வெற்றி – அதிர்ச்சியில் திமுக தரப்பு!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

தி.மு.க வேட்பாளர்கள் அதிகமாக வெற்றி பெற்று வரும் சூழலில், மதுரை 47-வது வார்டில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து மு.க.அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு போட்டியிட்டார்.

முபாரக் மந்திரி

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு மு.க.அழகிரி மோதல் போக்கைக் கைவிட்டு திமுக-வில் மீண்டும் இணைய விரும்பினார். அவருடைய ஆதரவாளர்களும் அதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், தி.மு.க தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி தேர்தலில் அழகிரியின் ஆதரவாளர்களான முபாரக் மந்திரியின் மனைவி பானுவும், இசக்கிமுத்துவின் மனைவியும் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.

இதனால், தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மேகலா மற்றும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பானு முபாரக் மந்திரி, இசக்கிமுத்துவின் மனைவி இடையேயான போட்டி பெரும் கவனம் பெற்றிருந்தது.

ஸ்டாலின், மு.க. அழகிரி!

இதைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர் பானு முபாரக் மந்திரி, பா.ஜ.க வேட்பாளரை விட அதிகமாக 2,270 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். அவரின் வெற்றி தி.மு.க தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அழகிரிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.