2 ஆண்டுகளுக்கு பின் வழக்கமான விமான சேவைகளை மீண்டும் துவக்க திட்டம் <!– 2 ஆண்டுகளுக்கு பின் வழக்கமான விமான சேவைகளை மீண்டும் துவக்… –>

மார்ச் முதல் வழக்கமான விமான சேவைகளை மீண்டும் துவக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏர் பபுள் முறையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து வழக்கமான சேவைகளை இயக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை, விமான போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.