#BREAKING || மொத்த அரசியல் கட்சிகளையும் வாஷ்-அவுட் செய்த சுயேட்சைகள்.! முழுவதையும் கைப்பற்றி அசத்தல்.!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

காலை 10 மணி நிலவரப்படி, மொத்தமாக 21 மாநகராட்சிகளில், திமுக 19 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல், 138 நகராட்சிகளில் 74 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது, அதிமுக நான்கு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பேரூராட்சிகளில் திமுக 29 இடங்களிலும், அதிமுக 17 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பேரூராட்சி பொறுத்தவரை திமுக 881 இடங்களிலும் அதிமுக 231 இடங்களிலும், பாமக 12 இடங்களிலும், தேமுதிக 9 இடங்களிலும். பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 212 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களிலும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.