ஓடும் பேருந்தில் ஏற முயன்று கால் இடறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பள்ளி மாணவர் <!– ஓடும் பேருந்தில் ஏற முயன்று கால் இடறி கீழே விழுந்து சக்கர… –>

கும்பகோணம் அருகே ஓடும் பேருந்தில் ஏற முயன்று தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவர், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

வலங்கைமானில் இருந்து கும்பகோணம் செல்லும் நகரப் பேருந்து ஒன்று, காலை அரியத்திடல் கிராமம் வழியாகச் சென்றுள்ளது. நிறுத்தத்தில் இருந்து பேருந்து கிளம்பிய பின் முகம்மது ஆதில் என்ற 11ஆம் வகுப்பு மாணவர் ஓடி வந்து முன்பக்க படிக்கட்டு வழியாக பேருந்தில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது கால் இடறி கீழே விழுந்த மாணவரின் உடல் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அதே பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.