ரயில் சேவை ரத்து செய்யப்படவில்லை

ரயில் சேவைக்கு தேவையான டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் எந்தவொரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக விஜேசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்கக்கூடிய மாற்று முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.