10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு?

சென்னை: தமிழ்நாட்டில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கல்வி நிலையங்கள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆண்டு இறுதித்தேர்வு நேரடி தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நிலையில், நடப்பாண்டு ஆஃப் லைனில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10, 12ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான நாளை  மதியம் 1 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் இதுபோன்ற அறிவிப்பு வெளியான நிலையில், இன்றும் அதுபோன்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.