அமீருக்கே எல்லா புகழும்: பருத்தி வீரன் 15வது ஆண்டில் கார்த்தி நெகிழ்ச்சி

அமீருக்கே எல்லா புகழும்: பருத்தி வீரன் 15வது ஆண்டில் கார்த்தி நெகிழ்ச்சி

அமீருக்கே எல்லா புகழும்: பருத்தி வீரன் 15வது ஆண்டில் கார்த்தி நெகிழ்ச்சி

3/1/2022 11:32:49 AM

2007ம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாக கார்த்தி நாயகனாக அறிமுகமானார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தினை அமீர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ச்சியாகத் தனது அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைத்தார் கார்த்தி. ‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என  வெற்றிப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய முன்னணி நாயகர்களின் பட்டியலில் ஒருவரானார்.

15 ஆண்டுகளில் 20 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் பாதிக்கும் மேல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்கள். ‘பருத்தி வீரன்’ வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக பலரும் கார்த்திக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கார்த்தியும்,  தனது 15 ஆண்டுக்கால பயணத்துக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்தி வீரன் படத்தில் என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டது.

எனக்குக் கிடைத்த அத்தனை புகழும் அமீர் சாரையே சேரும். செய்யும் வேலையில் என்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டு அதை ரசித்தும் செய்ய வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்ன அறிவுரையே நான் கற்ற பல பாடங்களில் பொக்கிஷமாக நினைக்கும் ஒரு பாடம். இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல் அண்ணா, என் அன்பார்ந்த ரசிகர்கள்  என அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  என்கிறார் கார்த்தி.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.