தொழில் முதலீட்டு கண்காட்சி… மார்ச் 26, 27-ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

சென்னை:
துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டு கண்காட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக, வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் துபாய் சுற்றுப்பயணம் செல்கிறார்.  
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது.  தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 
தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.