நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று … –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 12ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்கிறார்கள்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. 218 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 7 வார்டுகளுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.