ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம் – வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்த இந்தியா

ஜெனீவா,
உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த சிறப்புக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. இதன் மூலம் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அதேவேளை, ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 193 நாடுகள் 141 நாடுகள் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.