உக்ரைன் போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்படும் சீனா?

பெய்ஜிங்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா இன்று 8-வது நாளாக போர் செய்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ரஷியாவிற்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்துவிட்டன. மேலும் ரஷிய நாட்டு தயாரிப்புகள், சேவைகள் மீதும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடையை அறிவித்துவிட்டன. 
இந்நிலையில் சீனாவும், ரஷியாவும் இணைந்தே இந்த போரில் ஈடுபட்டு வருவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.
அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே தெரியும் என்றும், ரஷிய அதிகாரிகளை தொடர்புகொண்ட சீன அரசாங்கம் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கு பிறகு உக்ரைன் மீது படையெடுக்க வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை ஜோ பைடனின் நிர்வாகமும், ஐரோப்பிய அதிகாரிகளும் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியாவின் உக்ரைனுக்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்கவில்லை. அமெரிக்க அதிகாரிகள் பலரும் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதற்காக அவர்களும் ரஷியாவுடன் இணைந்து செயல்படுவதாக கூறிவிட முடியுமா என சீனா கேட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.