உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புடினுக்கு, போரை நிறுத்த அழுத்தம் தரும் வகையில் போராட்டத்தைத் தொடர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி வேண்டுகோள் விடுத்தார். போருக்கு எதிராக செயின்ட் பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ நகரங்களில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்டோரைத் தடுப்புக் காவலில் பிடித்து வைத்துள்ளதாகத் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.