சிட்லகட்டாவில் பட்டு மார்க்கெட் நாராயண கவுடா நம்பிக்கை| Dinamalar

சிக்கபல்லாபூர்-சிட்லகட்டா நகரின் அரசு பட்டு கூடு மார்க்கெட்டை, மாநில பட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் நாராயணா கவுடா நேற்று பார்வையிட்டார். அப்போது, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பட்டு மார்க்கெட் புனரமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.பட்டுத்துறை அமைச்சரான பின், முதன் முறையாக, உலக பிரசித்தி பெற்ற, சிக்கபல்லாபூர் சிட்லகட்டா நகரின் பட்டு மார்க்கெட்டுக்கு, அமைச்சர் நாராயண கவுடா நேற்று வந்தார். விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.பின் அவர் பேசியதாவது:மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராம்நகரில் வியாபாரம், வர்த்தகத்துக்காக மிகப்பெரிய ஹைடெக் மார்க்கெட் கட்டப்படும்.எதிர்வரும் நாட்களில், சிட்லகட்டா அரசு பட்டுக்கூடு மார்க்கெட்டை, ஹைடெக் மார்கெட்டாக அபிவிருத்தி செய்து, பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் நலனுக்காக, திட்டம் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.