சிக்கபல்லாபூர்-சிட்லகட்டா நகரின் அரசு பட்டு கூடு மார்க்கெட்டை, மாநில பட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் நாராயணா கவுடா நேற்று பார்வையிட்டார். அப்போது, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பட்டு மார்க்கெட் புனரமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.பட்டுத்துறை அமைச்சரான பின், முதன் முறையாக, உலக பிரசித்தி பெற்ற, சிக்கபல்லாபூர் சிட்லகட்டா நகரின் பட்டு மார்க்கெட்டுக்கு, அமைச்சர் நாராயண கவுடா நேற்று வந்தார். விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.பின் அவர் பேசியதாவது:மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராம்நகரில் வியாபாரம், வர்த்தகத்துக்காக மிகப்பெரிய ஹைடெக் மார்க்கெட் கட்டப்படும்.எதிர்வரும் நாட்களில், சிட்லகட்டா அரசு பட்டுக்கூடு மார்க்கெட்டை, ஹைடெக் மார்கெட்டாக அபிவிருத்தி செய்து, பட்டு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் நலனுக்காக, திட்டம் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
சிக்கபல்லாபூர்-சிட்லகட்டா நகரின் அரசு பட்டு கூடு மார்க்கெட்டை, மாநில பட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் நாராயணா கவுடா நேற்று பார்வையிட்டார். அப்போது, அதிநவீன தொழில்நுட்ப
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.