தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு பேரிடர் கூடுதல் நிதி ரூ.1,682 கோடி| Dinamalar

புதுடில்லி :இயற்கை பேரிடரை எதிர்கொண்ட தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக 1,682 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, 1,664.25 கோடி ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 17.86 கோடி ரூபாயும் மத்திய அரசு தருகிறது. இந்த நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக வழங்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது.

ஆந்திராவுக்கு 351.43; ஹிமாச்சல் 112.19; கர்நாடகா 492.39; மஹாராஷ்டிரா 355.39; தமிழகத்துக்கு 352.85 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரிக்கு 17.86 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.