பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் – மதுரையில் கணவன், மனைவி தற்கொலை <!– பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் – மதுரையில் கணவன், மனைவி … –>

பங்குசந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால், மதுரை மாவட்டத்தில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் பங்குசந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்த நிலையில், பங்குசந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக திடீரென பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜன் தனது 2 குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மனைவி லாவண்யாவுடன் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.