வாஷிங்டன்:அமெரிக்க பார்லி.,யில் நடந்த வன்முறை வழக்கை விசாரிக்க, 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள், ஜோ பைடன் புதிய அதிபராக பதவியேற்பதற்கு சில தினங்களுக்கு முன், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்திற்குள் நுழைந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது, கை வெஸ்லி ரெப்பிட் என்ற டிரம்ப் ஆதரவாளர், துப்பாக்கியுடன் பார்லி., வளாகத்திற்குள் நுழைந்து, போலீஸ் அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டார். வன்முறைகளில் ஈடுபட்டவர்களில், அவர் முக்கிய நபராக கருதப்படுகிறார்.இந்நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகள் குழு, நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, 12 நீதிபதிகள் மற்றும் நான்கு மாற்று நீதிபதிகளை தேர்வு செய்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி தாப்னே பிரெட்ரிச் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்:அமெரிக்க பார்லி.,யில் நடந்த வன்முறை வழக்கை விசாரிக்க, 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில், 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.