ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்.! <!– ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி குடியிரு… –>

உக்ரைன் நாட்டின் Zhytomyr நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி கிடந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அந்நாட்டு அரசின் அவசர சேவை மையம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் புகைந்து கொண்டிருந்த கட்டிட இடிபாடுகளை கிளறி உள்ளே சிக்கியிருந்தவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன.

குடியிருப்பு பகுதியில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்த விமான தளத்தை குறிவைத்து ஏவுகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் அது குறி தவறி குடியிருப்பு கட்டிடம் மீது விழுந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆன்டன் கெராஷென்கோ தெரிவித்துள்ளார்.

இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.